ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார் தமிழக அரசு இல்லத்தில் தம்பிதுரை மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை


ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார் தமிழக அரசு இல்லத்தில் தம்பிதுரை மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 19 Dec 2016 6:06 AM GMT (Updated: 19 Dec 2016 6:06 AM GMT)

வார்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. மின் கம்பங்கள், மின்சார டிரான்ஸ்பார்மர்கள் போன்றவை சாய்ந்ததால் நகரமே இருளில் மூழ்கி யது.புயலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வீடுகளில் மேற்கூரைகள் பறந்தன. மரங்களும் வேரோடு

சென்னை,

வார்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. மின் கம்பங்கள்,  மின்சார டிரான்ஸ்பார்மர்கள் போன்றவை சாய்ந்ததால் நகரமே இருளில் மூழ்கி யது.தென்னை, மா, வாழை, நெற்பயிர்களும் சேதம்அடைந்தன. தொலைத் தொடர்பு  சேவையும் முற்றிலுமாக முடங்கியது.

போர்க்கால அடிப்படை யில் மீட்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. சாலை களில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு படையினரும் வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு வழிவகை செய்தனர். மின்கம்பங்கள், டிரான்ஸ் பார்மர்களை சீரமைக்கும் பணியில்  மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான இடங்களுக்கு மின் வினி யோகம்  வழங்கப்பட்டு விட்டது.
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  அமைச்சர்கள் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு துரிதப் படுத்தினர்.  மின்சாரம் மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட  துறைகளுக்கு அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.500 கோடியை ஒதுக்கி முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். மேலும் சேத மதிப்புகளை பார்வையிட மத்திய குழுவும் இன்று வருகிறது.

இந்த நிலையில் வார்தா புயலால் ஏற்பட்ட  சேத மதிப்பை கணக்கிட்டு தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகள் வாரியாக அறிக்கை பெறப்பட்டு விட்டது.
இந்த  அறிக்கையை பிரதமர்   மோடியிடம் கொடுத்து நிவாரணம் வழங்க வலியுறுத்துவதற்காக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகள் இன்று டெல்லி சென்றனர். காலை 9.30 மணிக்கு அவர் கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப் பட்டனர். டெல்லி சென்றடைந்ததும். டெல்லியில் உள்ள தமிழக அதிகார பூர்வ இல்லத்தில் முதல் அமைச்சர் பன்னீர் செலவம் , மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைமற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று மாலை முதல்- அமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். புயலால் ஏற்பட்ட சேதமதிப்பு விவரம் அடங்கிய அறிக்கையை அவ ரிடம் கொடுத்து நிவாரணம் வழங்க வலியுறுத்துகிறார்.பின்னர் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு  முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதமும் கொடுக்கிறார்.
பின்னர்  ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவே சென்னை திரும்புகிறார்.

Next Story