‘கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாராளுமன்றம் செயல்பட வேண்டும்’ பிரதமர் மோடி விருப்பம்
பிரதமர் மோடி, கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாராளுமன்றம் செயல்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
புதுடெல்லி,
பாராளுமன்றம் சுமுகமாக செயல்பட அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாராளுமன்றம் செயல்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் திட்டங்களை அடுத்த நிதியாண்டியின் முதல் நாளில் இருந்தே தொடங்குவதற்கு வசதியாக, முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியை ஏற்படுத்தியதால், அந்த தொடர் முற்றிலும் முடங்கியது. அதைப்போல பட்ஜெட் தொடரிலும் அரசுக்கு குடைச்சலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டங்களை வகுத்து வருகின்றன.
மகா பஞ்சாயத்து
எனவே பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிக்க ஏதுவாக நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் மத்திய அரசால் நடத்தப்பட்டது. டெல்லியில் நடந்த இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரசை தவிர பிற முக்கியமான கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், ‘தேர்தல் நேரத்தில் நமக்குள்ளே சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பாராளுமன்றம் என்பது மகா பஞ்சாயத்து. அது கண்டிப்பாக செயல்பட வேண்டும்’ என்றார்.
நேர்மறையான பதில்
இந்த தகவலை பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஆனந்த் குமார், பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு அனைத்துக்கட்சிகளும் நேர்மறையாக பதிலளித்ததுடன், பாராளுமன்றம் சுமுகமாக இயங்க அவர்களும் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார்.
5 மாநில தேர்தல் நடைபெறுவதால் மத்திய அரசு பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்திருக்கக்கூடாது என்று கூறி வரும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்த ஆனந்த் குமார், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமும், சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே தங்கள் தீர்ப்பை வழங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவும், அனைத்து பிரிவினரும் பட்ஜெட்டால் பயன்பெற வேண்டும் என்பதுமே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
குலாம்நபி ஆசாத்
முன்னதாக பட்ஜெட் தாக்கல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேல்–சபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத், ‘கடந்த 2012–ம் ஆண்டிலும் 5 மாநில சட்டசபை தேர்தலால் இதைப்போல ஒரு நிலைமை ஏற்பட்ட போது அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பட்ஜெட் தாக்கலை தள்ளிப்போட்டது. அதைப்போல தற்போதும் பட்ஜெட் தாக்கல் செய்வதை அரசு தள்ளி வைத்திருக்க வேண்டும்’ என்று கூறினார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இடையில் சில நாட்கள் இடைவெளி விடப்படும் என தெரிகிறது. எனவே 2–ம் பகுதி கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பும் இதைப்போல ஒரு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்றும் குலாம் நபி ஆசாத் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதால், இந்த பிரச்சினை குறித்து பட்ஜெட் கூட்டதொடரின் முதல் பகுதியில் 2 நாட்கள் விவாதம் நடத்த வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் கேட்டுக்கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாராளுமன்றம் சுமுகமாக செயல்பட அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாராளுமன்றம் செயல்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் திட்டங்களை அடுத்த நிதியாண்டியின் முதல் நாளில் இருந்தே தொடங்குவதற்கு வசதியாக, முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியை ஏற்படுத்தியதால், அந்த தொடர் முற்றிலும் முடங்கியது. அதைப்போல பட்ஜெட் தொடரிலும் அரசுக்கு குடைச்சலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டங்களை வகுத்து வருகின்றன.
மகா பஞ்சாயத்து
எனவே பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிக்க ஏதுவாக நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் மத்திய அரசால் நடத்தப்பட்டது. டெல்லியில் நடந்த இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரசை தவிர பிற முக்கியமான கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், ‘தேர்தல் நேரத்தில் நமக்குள்ளே சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பாராளுமன்றம் என்பது மகா பஞ்சாயத்து. அது கண்டிப்பாக செயல்பட வேண்டும்’ என்றார்.
நேர்மறையான பதில்
இந்த தகவலை பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஆனந்த் குமார், பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு அனைத்துக்கட்சிகளும் நேர்மறையாக பதிலளித்ததுடன், பாராளுமன்றம் சுமுகமாக இயங்க அவர்களும் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார்.
5 மாநில தேர்தல் நடைபெறுவதால் மத்திய அரசு பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்திருக்கக்கூடாது என்று கூறி வரும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்த ஆனந்த் குமார், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமும், சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே தங்கள் தீர்ப்பை வழங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவும், அனைத்து பிரிவினரும் பட்ஜெட்டால் பயன்பெற வேண்டும் என்பதுமே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
குலாம்நபி ஆசாத்
முன்னதாக பட்ஜெட் தாக்கல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேல்–சபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத், ‘கடந்த 2012–ம் ஆண்டிலும் 5 மாநில சட்டசபை தேர்தலால் இதைப்போல ஒரு நிலைமை ஏற்பட்ட போது அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பட்ஜெட் தாக்கலை தள்ளிப்போட்டது. அதைப்போல தற்போதும் பட்ஜெட் தாக்கல் செய்வதை அரசு தள்ளி வைத்திருக்க வேண்டும்’ என்று கூறினார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இடையில் சில நாட்கள் இடைவெளி விடப்படும் என தெரிகிறது. எனவே 2–ம் பகுதி கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பும் இதைப்போல ஒரு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்றும் குலாம் நபி ஆசாத் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதால், இந்த பிரச்சினை குறித்து பட்ஜெட் கூட்டதொடரின் முதல் பகுதியில் 2 நாட்கள் விவாதம் நடத்த வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் கேட்டுக்கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Next Story