சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்துக்கு தி.மு.க. என்றும் துணை நிற்கும்


சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்துக்கு தி.மு.க. என்றும் துணை நிற்கும்
x
தினத்தந்தி 25 Jun 2017 1:48 PM GMT (Updated: 25 Jun 2017 1:48 PM GMT)

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:–

சென்னை,

இஸ்லாமிய சமுதாய மக்கள் தங்களை வருத்திக் கொண்டு நோன்பிருந்து அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் உயரிய பண்புகளை உலக அரங்கில் வெளிப்படுத்தி ரம்ஜான் திருநாளை இன்பத்துடனும், எழுச்சியுடனும் கொண்டாடுவதை எண்ணிப் பார்க்கிறேன்.

தி.மு.க.வுக்கும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் உள்ள உறவு காயிதே மில்லத் காலத்தில் இருந்து கைப்பற்றி நடைபோட்டுக் கொண்டிருப்பதை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.

தலைவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வின் மீது என்றும் அன்பும், பாசமும் செலுத்திவரும் சிறுபான்மையின மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களையும், சிறப்பு சலுகைகளையும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இஸ்லாமிய மக்களின் உயர்வுக்காக என்றும் பாடுபடுகின்ற உரிமையுடனும் உணர்வுகளுடனும், தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தலைவர் கருணாநிதி சார்பில், எனது நெஞ்சார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி, தி.மு.க. என்றைக்கும் சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்திற்காக துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story