6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை


6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 25 July 2017 10:15 PM GMT (Updated: 25 July 2017 4:20 PM GMT)

சென்னை தியாகராயநகர் கங்கைகரைபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனு என்ற ஸ்ரீனிவாசன்(வயது 26).

சென்னை,

கூலி தொழிலாளி. கடந்த 2014–ம் ஆண்டு இவர், தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி கலைமதி முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் கவுரி அசோகன் ஆஜரானார்.

மனுவை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட சீனுவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.40 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


Next Story