பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு


பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு
x

படிக்கட்டில் மாணவர்கள் பயணிப்பதைத் தடுப்பது தொடர்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.

சென்னை,

பேருந்துகளில் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணிப்பதைத் தடுப்பது தொடர்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையில், கூடுதல் பேருந்துகள் இயக்கினாலும் இளைஞர்களின் படிக்கட்டு பயணமும் விபத்தும் குறையவில்லை .பல இடங்களில் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் இளைஞர்களால் தாக்கப்படும் நிகழ்வுகள் நடக்கிறது . அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் எப்படி சமாளிப்பார்கள் . அனைத்து பேருந்துகளிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் தமிழகத்தில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன ? எத்தனை பேருந்துகளில் பொருத்தப்படாமல் உள்ளன? என கேள்வி எழுப்பி ,உள்துறை செயலர் , போக்குவரத்து துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது


Next Story