சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னா இடம் பெறுவாரா?


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னா இடம் பெறுவாரா?
x
தினத்தந்தி 14 Nov 2017 5:19 AM GMT (Updated: 14 Nov 2017 5:19 AM GMT)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி,பாப் டுபிளசி, அஸ்வின் ஆகியோரை தக்கவைத்து கொண்டு ரெய்னாவை கழற்றிவிட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


எதிர்வரும் 2018 ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எல்லா விதத்திலும் தயாராகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சுமார் 2 ஆண்டுகள் சூதாட்ட தடைக்கு பின்னர் மீண்டும் அடுத்த ஆண்டு களமிறங்கவுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் தொடருக்கு திரும்புவதால், ஒவ்வொரு அணியிலும் இரண்டு உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் என மூன்று வீரர்களை தவிர, எஞ்சிய எல்லா வீரர்களையும் ஏலத்தில் விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதனால் எல்லா அணி நிர்வாகமும் யாரை தக்க வைப்பது என பெரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரை தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அஸ்வினும் ஒருவர் ஆவார்.

வெளிநாட்டு வீரர்களில் தென் ஆப்ரிக்க வீரர் பாப் டுபிளசி பேட்டிங்கில்  கைகொடுப்பார் என்பதால் அவரை தக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டோனி, வழக்கம் போல தனது கேப்டன்  பொறுப்பை தொடர்வார் என்பதில் சந்தேகமே இல்லை.இதை ஏற்கனவே தமிழக பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போதே அணி நிர்வாகம் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழட்டி விடப்படும் வீரர் ரெய்னா என்பது உறுதியாகி உள்ளது.

Next Story