ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
Published on

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேனாபதி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ்(வயது 59). விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடு கத்தும் சத்தம் கேட்டு அவர் வெளியே வந்து பார்த்தபோது, 2 பேர் ஒரு ஆட்டை திருடி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த காமராஜ் சத்தம் போட்டார். ஆனால் அக்கம், பக்கத்தினர் வருவதற்குள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் ஆட்டுன் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து காமராஜ் திருமானூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஆடுகளை திருடியது கரைவெட்டிபரதூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமியின் மகன் இன்பத்தமிழன்(20), நீலமேகத்தின் மகன் சுந்தரன்(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆட்டை விற்க முயன்றபோது போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, ஆட்டை மீட்டனர். மேலும் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com