செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,029 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 526- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 60 ஆயிரத்து 77 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 875-ஆக உயர்ந்தது. 7 ஆயிரத்து 574 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 295 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 75- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 31 ஆயிரத்து 407 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486- ஆக உயர்ந்துள்ளது. 2,182 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story