தேசிய செய்திகள்

காற்று மாசு: டெல்லிக்கு ரூ.18 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு + "||" + Delhi To Receive Over ₹ 18 Crore From Centre To Combat Air Pollution

காற்று மாசு: டெல்லிக்கு ரூ.18 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு

காற்று மாசு: டெல்லிக்கு ரூ.18 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு
என்சிஏபி திட்டத்தின் மூலம் டெல்லி 18.74 கோடி ரூபாய் நிதியை பெறவுள்ளது.
புதுடெல்லி,

வரும் 2024-ஆம் ஆண்டுக்குள், தேசிய அளவில் பிஎம் 2.5, பிஎம்10 ஆகிய நுண் துகள்கள் வகைகளை 20 லிருந்து 30 சதவிகிதம் வரை குறைப்பதற்காக தேசிய தூய்மை காற்று திட்டம் வகுக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டை கணக்கில் கொண்டு இது ஒப்பிடப்படவுள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதி குறித்து உயர்மட்ட அலுவலர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "என்சிஏபி திட்டத்தின் மூலம் டெல்லி 18.74 கோடி ரூபாய் நிதியை பெறவுள்ளது. 2019ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து முதல்முறையாக டெல்லிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

நிர்ணயிக்கப்பட்ட தேசிய சுற்றுப்புற காற்றின் தர நிலையை பூர்த்தி செய்யாத 132 நகரங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. தேசிய காற்று கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் 2011-2015 காலகட்டத்தில் பெறப்பட்ட சுற்றுப்புற காற்றின் தரவின் அடிப்படையில் இந்த நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

2017 ம் ஆண்டு டெல்லியில் பிஎம் 10 வகை நுண்துகள்கள், ஒரு மீட்டருக்கு சராசரியாக 240 மைக்ரோ கிராமாக இருந்தது. இதனை 2024ம் ஆண்டிற்குள் 168 மைக்ரோ கிராமாக குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவிற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: அமித்ஷா உறுதி
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
2. கொரோனா தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்; மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
பண்டிகை காலத்தில் கொரோனா பரவல் எழுச்சி பெறாமல் இருக்க வழிகாட்டும் நெறிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்துவதுடன், தடுப்பூசி போடுவதில் இன்னும் வேகம் கூட்ட வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
3. முல்லைப்பெரியாறு அணை வழக்கில் அறிக்கை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம்
முல்லைப்பெரியாறு அணை வழக்கில் உத்தரவிட்டபடி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் அளித்துள்ளது.
4. வருகிற 15-ந் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: மத்திய அரசு
தனி விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை 15-ந் தேதி முதல் இந்தியா வர அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
5. மீண்டும் டாடா குழுமம் வசம் செல்கிறது ஏர் இந்தியா?
ஏர் இந்தியா, டாடா குழுமத்துக்கு கைமாறப்பட்டால், இந்த விமான நிறுவனத்தை 67 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைவசப்படுத்தும் வாய்ப்பு அதற்கு கிடைக்கும்.