இமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு: வெளுத்து வாங்கிய மழை.. 7 பேர் உயிரிழப்பு

இமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.
இமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு: வெளுத்து வாங்கிய மழை.. 7 பேர் உயிரிழப்பு
Published on

புதுடெல்லி,

இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், மழை கொட்டி தீர்த்தது. சிறிது நேரத்தில் மாம்லை கிராமத்தில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மழை வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். வெள்ளத்தில் சிக்கி தவித்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேகவெடிப்பு சம்பவத்தால் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ள இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்கு, தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது; -

"மேக வெடிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த கடினமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com