மும்பையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல்; போலீசார் தகவல்


மும்பையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல்; போலீசார் தகவல்
x

மும்பையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என தொலைபேசி வழியே மிரட்டல் வந்துள்ளது என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.



மும்பை,



மராட்டியத்தின் மும்பை நகரங்களில் மக்கள் அதிகம் கூடக்கூடிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என தொலைபேசி வழியேயான அழைப்பில் மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

இதுபற்றி மும்பை போலீசார் கூறும்போது, மும்பை பெருநகரில் அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால், ஜுகுவில் உள்ள பி.வி.ஆர். மால் மற்றும் விமான நிலைய சகாரா ஓட்டல் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என போலீசாருக்கு தொலைபேசி வழியே மிரட்டல் தகவல் வந்து உள்ளது.

இந்த மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணியில் பாதுகாப்பு முகமைகள் ஈடுபட்டு உள்ளன என தெரிவித்து உள்ளனர். மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். அதன் நினைவு தினம் இன்னும் ஒரு சில நாட்களில் வரவுள்ளது. இந்த சூழலில் வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story