டெல்லியில் பனிமூட்டம்: விமானம், ரெயில் சேவைகள் கடும் பாதிப்பு


டெல்லியில் பனிமூட்டம்: விமானம், ரெயில் சேவைகள் கடும் பாதிப்பு
x

சர்வதேச விமானங்கள் உள்பட 53 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

நாட்டின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம்போல் காட்சியளிக்கிறது.

குறிப்பாக டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் நிலவி வரும் கடும் பனி மூட்டம் காரணமாக 170-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் உள்பட 53 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story