பஞ்சாபில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!

பஞ்சாப் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியுள்ளது.
பஞ்சாபில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!
Published on

அமிர்தசரஸ்,

பஞ்சாப் அரசு இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது.

சில்லறை நுகர்வோருக்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) முறையே 92 பைசா மற்றும் 88 பைசாக்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.98.65 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.105.24 ஆகவும் உள்ளது.

இந்த விலை உயர்வு மூலம், ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என, அரசு நம்புகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com