கர்நாடகத்துடன் எல்லை பிரச்சினை: மராட்டியம் வரும் பிரதமர் அவரது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் - உத்தவ் தாக்கரே


கர்நாடகத்துடன் எல்லை பிரச்சினை: மராட்டியம் வரும் பிரதமர் அவரது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்  -  உத்தவ் தாக்கரே
x

இன்று மராட்டியம் வரும் பிரதமர் மோடி கர்நாடக எல்லை பிரச்சினையில் அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாக்பூர் வருகிறார். இந்த நிலையில் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே பேசியதாவது:-

நாக்பூர் - மும்பை விரைவு சாலையை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.

அவரை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் மராட்டியம் வரும் போது, அவர் மராட்டிய - கர்நாடக எல்லை பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பசவராஜ் பொம்மைக்கு கண்டனம்

இதேபோல மராட்டிய எம்.பி.க்கள், அமித்ஷாவை சந்தித்ததால் எல்லை பிரச்சினையில் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை என கூறியுள்ள கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு மகாவிகாஸ் அகாடி கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக அமித்ஷாவை சந்தித்த எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்று இருந்த உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் கூறுகையில், " அமித்ஷா எங்களின் கோரிக்கையை கவனமாக கேட்டார். 2 மாநில முதல்-மந்திரிகளையும் அழைத்து பேசுவதாக கூறினார். ஆனால் பசவராஜ் பொம்மையின் பேச்சு, அவர் மத்திய அரசை மதிப்பது இல்லை என்பதை காட்டுகிறது. 2023-ம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இதுபோன்ற கருத்துக்கள் கூறப்படுகின்றன " என்றார்.


Next Story