வீட்டில் கள்ளக் காதலனுடன் தனிமையில் இருந்த மனைவி - நேரில் பார்த்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு...!


வீட்டில் கள்ளக் காதலனுடன் தனிமையில் இருந்த மனைவி - நேரில் பார்த்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு...!
x
தினத்தந்தி 17 Oct 2022 7:51 AM GMT (Updated: 17 Oct 2022 8:02 AM GMT)

கோவிலுக்குள் புகுந்து சாமி சிலையை உடைத்த வழக்கில் அவரை போலீசார் தேடிவந்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் ஐயப்பன்(35).தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள சுடலை கோவிலில் புகுந்து சாமி சிலையை சேதப்படுத்தினார். இதனைதொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளி ஐயப்பன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக ஐயப்பன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இதுகுறித்த போலீசார் கூறுகையில்,

ஐயப்பனுக்கும், அவரது மனைவி ஈஸ்வரிக்கும் (29) கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிள்ளைகள் உள்ளது.

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்தவர் சீனித்துரை. விவசாயி. இவரது தோட்டத்திற்கு ஈஸ்வரி வேலைக்கு சென்றுள்ளார். இந்த பழக்கத்தின் காரணமாக ஈஸ்வரிக்கும், சீனித்துரைக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி ஐயப்பன் வீட்டிற்கு வந்த போது, மனைவி ஈஸ்வரியும், சீனித்துரையும் தனிமையில் இருந்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த அவர் மனைவியை கண்டித்துள்ளார். பின்னர் ஆத்திரத்தில் சுடலை கோவிலுக்குள் சென்று சாமி சிலையை சேதப்படுத்தியது விசாரணையில் அம்பலமானது. இதனை தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த ஐயப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஐயப்பனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மனைவி ஈஸ்வரியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சீனித்துரையை தேடி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story