மீண்டும் ரூ. 43 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை... அதிர்ச்சியில் மக்கள்


மீண்டும் ரூ. 43 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை... அதிர்ச்சியில் மக்கள்
x

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.

சென்னை,

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. இது மக்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.43,400-க்கும், கிராம் ரூ.5,425-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து, ஒரு கிராம் ரூ.72.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.72,700-க்கும் விற்கப்படுகிறது.


Next Story