கடன் பிரச்சினையால் குடும்பத்தில் தகராறு: மாடியில் இருந்து குதித்து பெயிண்டர் தற்கொலை


கடன் பிரச்சினையால் குடும்பத்தில் தகராறு: மாடியில் இருந்து குதித்து பெயிண்டர் தற்கொலை
x

சென்னை திரு.வி.க.நகரில் கடன் பிரச்சினையால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறால் மாடியில் இருந்து குதித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை திரு.வி.க.நகர், ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 47). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சந்திரசேகர் செய்து வந்த தொழிலில் வருமானம் குறைவாக இருந்து வந்ததால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கடன் பிரச்சினையில் சிக்கிய அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்திரசேகர் நேற்று அதிகாலை வீட்டின் 3-வது தளத்தில் உள்ள மொட்டை மாடிக்குச் சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திரு.வி.க.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story