தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் 4 நாட்கள் பகுதி நேரமாக ரத்து


தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் 4 நாட்கள் பகுதி நேரமாக ரத்து
x

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 4 நாட்கள் மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை

சென்னை பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்கள் இடையே இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 14-ந்தேதி(புதன்கிழமை) வரை 4 நாட்கள் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே, இந்த நாட்களில் சில மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு இரவு 10.35 மணிக்கு செல்லும் ரெயில், ஆவடிக்கு இரவு 11.30 மணிக்கு செல்லும் ரெயில்களும், அதேபோல் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு இரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயிலும், இன்றும், 13-ந்தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 1.20 மணிக்கு செல்லும் ரெயில், திருவள்ளூரில் இருந்து சென்டிரலுக்கு அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில், சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் ரெயில்கள் நாளை(திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

ஆவடியில் இருந்து சென்டிரலுக்கு அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரெயில், சென்டிரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் வரும் 12 மற்றும் 14-ந்தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு இரவு 10.45 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் இன்றும், 13-ந்தேதியும் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 3.50 மணிக்கு இயக்கப்படும் ரெயில் வரும் 14-ந்தேதி ஆவடியில் இருந்து இயக்கப்படும்.

சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 4.30 மணிக்கு செல்லும் ரெயில் வரும் 12 மற்றும் 14-ந்தேதிகளில் ஆவடியில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story