குடும்பத்தகராறில் மாமனார் வெட்டிக்கொலை - மருமகன் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு


குடும்பத்தகராறில் மாமனார் வெட்டிக்கொலை - மருமகன் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
x

குடும்பத்தகராறில் மாமனார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மருமகன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.

மதுரை


குடும்பத்தகராறில் மாமனார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மருமகன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.

வெட்டிக்கொலை

மதுரை தெற்கு வாசல் நாடார் வித்யாலயா தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 52). நேற்று இரவு இவர் தெற்கு வாசல் மார்க்கெட் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளி அருகே 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிவிட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த தெற்கு வாசல் போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்தவரின் உடலை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு

பின்னர் தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பாலசுப்பிரமணியன் அவரது மகளை பிரபாகரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மேலும் விவாகரத்து தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தனது மகளை பாலசுப்பிரமணியன் வேறொரு நபருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

விசாரணை

இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மாமனாரை கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வருகிறது. அதைத்தொடர்ந்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள். அவர்களை பிடித்தால் தான் உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story