நிரம்பும் அணைகள்... தாமிரபரணி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி நீரை திறக்க முடிவு..!


நிரம்பும் அணைகள்... தாமிரபரணி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி நீரை திறக்க முடிவு..!
x

தாமிரபரணி ஆற்றில் 30,000 கன அடி நீர் திறக்க உள்ளதால் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை நீடித்து வருகிறது. இதனால் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாபநாசம் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. மேலும், பாபநாசம் அணைக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் 30,000 கன அடி நீரை திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. தற்போது பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனை பிற்பகல் 2 மணியளவில் 15,000 கன அடியாகவும், தொடர்ந்து 4 மணிக்கு மேல் 30,000 கன அடியாகவும் அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

தாமிரபரணி ஆற்றில் 30,000 கன அடி நீர் திறக்க உள்ளதால் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மழையால் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழக பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story