வாகனம் மோதி முதியவர் சாவு

வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
செஞ்சி,
செஞ்சி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கடலாடி கூட்டுரோடு அருகே சாலையோரம் நடந்து சென்ற 70 வயதுடைய முதியவர் மீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமரன் கொடுத்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளை பெற்றால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்ததவர் யார்?, விபத்துக்கு காரணமான வாகன ஓட்டி யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





