ஐவர் ஆக்கி போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு


ஐவர் ஆக்கி போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 25 Jun 2023 8:03 PM GMT (Updated: 26 Jun 2023 9:45 AM GMT)

பாளையங்கோட்டையில் நடந்த ஐவர் ஆக்கி போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

உலக ஒலிம்பிக் தின விழிப்புணர்வை முன்னிட்டு, ஆக்கி யூனிட் ஆப் நெல்லை சார்பில், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு விடுதி ஆக்கி வீரர்களுக்கு ஐவர் ஆக்கி போட்டி பாளையங்கோட்டையில் நடத்தப்பட்டது. மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியை பாளையங்கோட்டை விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயரத்தினராஜன் தொடங்கி வைத்தார்.

இதில் ஆண்கள் பிரிவில் கவுதம் ஆக்கி அணிக்கு முதல் பரிசும், மணிமாறன் ஆக்கி அணிக்கு 2-வது பரிசும், கிருஷ்ணன் ஆக்கி அணிக்கு 3-வது பரிசும் கிடைத்தது. பெண்களுக்கான பிரிவில் மகேஸ்வரி ஆக்கி அணிக்கு முதலிடமும், முப்புடாதி ஆக்கி அணிக்கு 2-வது இடமும் துரைச்சி ஆக்கி அணிக்கு 3-வது இடமும் கிடைத்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் தலைமை தாங்கினார். செயலாளர் பீர்அலி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை பரிசுகளை வழங்கினார்.


Next Story