கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

கஞ்சா வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திலகர் திடல் அருகே சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர் புதுக்கோட்டை சிப்காட்டை சேர்ந்த பாலாஜி (வயது 26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





