திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கு; 7-வது குற்றவாளி அசாம் மாநிலத்தில் கைது - தனிப்படை போலீசார் அதிரடி


திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கு; 7-வது குற்றவாளி அசாம் மாநிலத்தில் கைது - தனிப்படை போலீசார் அதிரடி
x

ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் 7-வது குற்றவாளியை அசாம் மாநிலத்தில் வைத்து திருவண்ணாமலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி, 4 ஏ.டி.எம். மையங்களை உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளியடித்துச் சென்றனர். இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க திருவண்ணாமலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 6-வதாக சிராஜுதீன் என்ற நபரை ராஜாஸ்தானில் வைத்து திருவண்ணாமலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து 7-வது நபராக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த வாகித் என்ற குற்றவாளியை அசாம் மாநிலத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story