பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 4 பேர் படுகாயம்


பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Jan 2019 10:45 PM GMT (Updated: 5 Jan 2019 7:18 PM GMT)

பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் சத்தார் பகுதியில் கலாபாரி என்னும் பிரபல மார்க்கெட் உள்ளது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் நேற்று காலை பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். 12 கடைகள் சேதம் அடைந்தன.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியை முற்றுகையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், காரில் வைக்கப்பட்டிருந்தது மிகவும் சக்தி வாய்ந்த குண்டு என்பதும் அது முன்கூட்டியே வெடித்ததும் தெரியவந்தது.

மார்கெட் திறக்கப்படுவதற்கு முன்பாகவே குண்டு வெடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story