'ஆப்பிள் ஆப் ஸ்டோரில்' இருந்து டுவிட்டர் நீக்கமா? இரு நிறுவன தலைவர்களும் சந்திப்பு


ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டுவிட்டர் நீக்கமா? இரு நிறுவன தலைவர்களும் சந்திப்பு
x

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கை எலன் மஸ்க் நேற்று முன்தினம் திடீரென சந்தித்துப்பேசினார்.

டுவிட்டர் நிறுவனத்தை அமெரிக்க கோடீசுவர தொழில் அதிபர் எலன் மஸ்க் கடந்த அக்டோபர் மாதம் வாங்கியதைத் தொடர்ந்து, ஆப்பிள் நிர்வாகி பில் ஷில்லர், டுவிட்டரை விட்டு விலகுவதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்தநிலையில் டுவிட்டரை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்போவதாக ஆப்பிள் நிறுவனம், கடந்த திங்கட்கிழமை மிரட்டியது. இப்படி நடந்து விடடால், டுவிட்டரை அதன் உபயோகிப்பாளர்கள் அணுகுவதில் சிக்கல் எழும்.

இதுபற்றி கருத்து தெரிவித்த டுவிட்டர் நிறுவன அதிபர் எலான் மஸ்க், "ஆப்பிளோ, கூகுளோ தங்களது ஆப் ஸ்டோரில் இருந்து டுவிட்டரை நீக்கினால், புதிய ஸ்மார்ட் போனை உருவாக்குவேன்" என்று அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கை எலன் மஸ்க் நேற்று முன்தினம் திடீரென சந்தித்துப்பேசினார்.

இதைத் தொடர்ந்து எலன் மஸ்க் கூறும்போது, "நாங்கள் நல்லதொரு பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களிடையே இருந்த தவறான புரிதல்கள் அகற்றப்பட்டு விட்டன. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டுவிட்டரை நீக்குவது குறித்து அவர்கள் பரிசீலிக்கவில்லை" என தெரிவித்தார்.

இதையடுத்து ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டுவிட்டர் நீக்கப்பட மாட்டாது என தெரிய வந்துள்ளது.


Next Story