பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு

பாகிஸ்தானில் இன்று காலை 9.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் 90 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இதற்கு முன்னதாக இன்று அதிகாலை 2.57 மணியளவிலும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com