பாகிஸ்தானில் பரபரப்பான சாலையில் குண்டு வெடிப்பு - அதிர்ச்சி சம்பவம்

பாகிஸ்தானில் பரபரப்பான சாலையில் குண்டு வெடித்தது.
லாகூர்,
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குட்டா நகரில் ஷப்சல் என்ற பரபரப்பான சாலை உள்ளது. இந்த பகுதியில் இன்று மாலை வழக்கம்போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன.
அப்போது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டு திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அங்கு நின்றுகொண்டிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். இதில், 3 பேர் பெண்கள் ஆகும்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். மேலும், படுகாயமடைந்த 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தலிபான்களின் கிளை பயங்கரவாத அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






