ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவ சட்டம் அமல்: புதின் அதிரடி


ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவ சட்டம் அமல்: புதின் அதிரடி
x

கோப்புப்படம்

ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுவதாக புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ,

சிறப்பு ராணுவ நடவடிக்கை என கூறி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட அந்த 4 பிராந்தியங்களையும் ரஷியாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

இந்த நிலையில் ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களிலும் ரஷிய அதிபர் புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்தி உள்ளார். ராணுவ சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து புதின் குறிப்பிடவில்லை. அதே சமயம் இந்த உத்தரவு இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.


Next Story