நியூசி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்த இந்தியா


நியூசி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்த இந்தியா
x
தினத்தந்தி 21 Jan 2023 7:44 AM GMT (Updated: 21 Jan 2023 7:45 AM GMT)

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, சில வினாடிகள் யோசித்த பின்னர் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

ராய்ப்பூர்,

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாக சில வினாடிகள் யோசித்த பின்னர் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story