விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள்: தியான அறையில் உடலுறவு; ரசிகர்களுக்கு எச்சரிக்கை


விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள்:  தியான அறையில் உடலுறவு; ரசிகர்களுக்கு எச்சரிக்கை
x

சல்லி போல்டன்

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை காண வந்த ஜோடி ஒன்று தியான அறையில் பாலியல் உறவில் ஈடுபட்டது சர்ச்சையானது.

லண்டன்,

இங்கிலாந்தில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டியை காண வரும் ரசிகர்களின் வசதிக்காக அமைதி அறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த அறையில், இறை வணக்கம், தியானம், குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக ரசிகர்கள் தங்கி கொள்ளலாம். சார்ஜிங் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை காண வந்த ஜோடி ஒன்று தியான அறைக்கு சென்று பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளது. இது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி சாட்சியம் கூறிய நபர் ஒருவர், ஆண் மற்றும் பெண் என இரண்டு பேர், முகத்தில் பெரிய புன்னகையுடன் அறையில் இருந்து வெளியே வந்தனர்.

அந்த பெண் கோடை காலத்தில் அணிய கூடிய நீண்டதொரு கவுனை அணிந்து காணப்பட்டார். அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர்? என்பதில் சந்தேகமே இல்லை என கூறியுள்ளார்.

இதேபோன்று, மற்றொரு ரசிகர் கூறும்போது, கதவுக்கு அருகே இருந்து காதல் நெருக்கத்துடன் இருந்ததற்கான முனகல் சத்தங்கள் கேட்டன என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இதுபோன்று எதுவும் நடந்து விட கூடாது என்பதற்காக விம்பிள்டன் போட்டி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

அனைத்து இங்கிலாந்து புல்வெளி டென்னிஸ் கிளப்பின் தலைமை செயல் அதிகாரி சல்லி போல்டன் கூறும்போது, அறையை மக்கள் சரியான வழியில் பயன்படுத்துகின்றனர் என உறுதி செய்யப்படும்.

அமைதி அறை என்றால் அதில் பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். ஜோடிகள் நெருக்கத்துடன் இருக்க பயன்படுத்த கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.


Next Story