

வடகாடு:
வடகாடு அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மிக விமரிசையாக மது எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடை காரணமாக நேற்று முன்தினம் இரவில் மது எடுப்பு விழா நடத்தப்பட்டது. இதில் இப்பகுதிகளில் உள்ள பெண்கள் விரதம் இருந்து நெல் மணிகளை போடப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மதுகுடத்தை தலையில் சுமந்து சென்று, அம்மனை சுற்றி வந்து வழிபட்டு சென்றனர்.