அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு

புதுவையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.24 கோடியை ஒதுக்கீடு செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு
Published on

புதுச்சேரி

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.24 கோடியை ஒதுக்கீடு செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு நிதியுதவி

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் அரசு நிதியுதவி பெறும் 35 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அரசு சார்பில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது சம்பள பணத்தில் 95 சதவீதத்தை அரசு வழங்கி விடுகிறது. மீதமுள்ள 5 சதவீதத்தை நிர்வாகம் வழங்குகிறது. இவர்களுக்கான சம்பள தொகையை அரசு அவ்வப்போது விடுவித்து வருகிறது.

ரூ.24 கோடி ஒதுக்கீடு

அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான சம்பளத்துக்கு ரூ.24 கோடியே 15 லட்சத்து 51 ஆயிரத்து 500-ஐ ஒதுக்கி புதுவை கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்பட உள்ளன.

இந்த நிதியில் 2023-24-ம் ஆண்டுக்கு ஊழியர்களின் தொழில்வரியை பிடித்தம் செய்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்துமாறும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான உத்தரவை கல்வித்துறை சார்பு செயலாளர் வெர்பினோ ஜெயராஜ் வெளியிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com