பஸ்சில் பயணிகளிடம் சில்லரை கேட்டு வாக்குவாதம் செய்யக்கூடாது: கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை

பயணிகளிடம், கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன.;

Update:2025-11-02 06:44 IST

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் குணசேகரன், டிரைவர்கள் மற்றும கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநகர பஸ்களில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டுக்கு உரிய சில்லரையுடன் பயணிக்க வேண்டும் என்ற வாக்குவாதத்தில் கண்டக்டர்கள் ஈடுபடுவதாக பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன.

எனவே, பஸ்சில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லரை கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யக்கூடாது. பயணச் சீட்டைப் பெற பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதி தொகையை வழங்குமாறு மாநகரப் போக்குவரத்துக் கழக கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பணிமனைகளில் பணியின்போது கண்டக்டர்களுக்கு வழங்கப்படும் முன் பணத்தை பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முறையாக பயன்படுத்த வேண்டும்.

பயணிகளிடம் சில்லரை தொடர்பான விவாதங்களை தவிர்த்து கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்