ஜல்லிக்கட்டு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது - நடிகர் சூரி
உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக சூரி வழங்கினார்.;
மதுரை,
மதுரை பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது போட்டியை கண்டுகளிப்பதற்காக நடிகர் சூரி, ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு வருகை தந்தார். அப்போது சிறப்பு விருந்தினராக வருகை தந்து போட்டியை தொடங்கி வைத்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக சூரி வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் சூரி பேசியதாவது: "ஜல்லிக்கட்டு கலாசாரம் இடையில் குறையக்கூடிய சூழல் வந்துச்சு.. மீண்டும் எழுச்சிபெற்று தற்போது சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இன்னும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது.” என்றார்.