நாகர்கோவிலில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கம்
நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.;
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி தாம்பரத்தில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22657) கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22658) கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
மங்களூரு சென்டிரலில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16649), கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மங்களூரு சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16650), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
தாம்பரத்தில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12667), கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12668), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
சென்னை சென்டிரலில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12689), கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12690), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
நாகர்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் ரெயில் (56707), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயில் (56708), கன்னியாகுமரி வரை செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.