பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது... சீறும் காளைகளை அடக்கும் காளையர்கள்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.;

Update:2026-01-16 09:44 IST

மதுரை,

பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,000 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 600 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்கின்றனர். மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மொத்தம் 10 சுற்றுகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை பிடித்த வீரர்கள், இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவர். இறுதிச்சுற்றில் அதிக காளைகளை பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. சிறந்த காளைக்கும் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்