முதல்தர கிரிக்கெட்டில் விராட் கோலி புதிய சாதனை

டெல்லி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.;

Update:2025-12-24 19:49 IST

மும்பை,

33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டெல்லி - ஆந்திரா அணிகள் மோதின. இதில் டெல்லி அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, பண்ட் விளையாடினர்.

முதலில் களமிறங்கிய ஆந்திரா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியில் விராட் கோலி, சதமடித்து அசத்தினார்.அவர் 131 ரன்கள் எடுத்தார்.37. 5 ஓவர்களில் டெல்லி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்த போட்டியில் சதமடித்ததால் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி முதல்தர கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களில் சச்சின் தெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். சச்சின் 538 போட்டிகள் விளையாடி 60 சதங்கள் விளாசியுள்ளார். விராட் கோலி 330 போட்டிகளில் 58 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்