மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

பரமத்தி வேலூர் பகுதியைச்சேர்ந்த 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறையினர் மற்றும் பரமத்திவேலூர் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பரமத்தி வேலூர்,

பரமத்தி வேலூர் 9-வது வார்டு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சின்னமணலியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வருகிற 20-ந் தேதி எடப்பாடியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.