மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய 2 பேர் கைது

மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

கறம்பக்குடி

கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மழையூர் தெற்கு மாங்கோட்டை பிரிவு சாலையில் சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அக்னி ஆற்றில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கோபாலகிருஷ்ணன் (வயது 29), அன்பு ராஜ் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.