மும்பை

சாலை விபத்தில் 2 பேர் பலி: பணியில் அலட்சியம் காட்டிய ஒப்பந்ததாரர் மீது வழக்கு

பால்கர் மாவட்டம் அம்பேகாவ் பகுதியில் சாலை விபத்தில் 2 பேர் பலி

தினத்தந்தி

வசாய், 

பால்கர் மாவட்டம் அம்பேகாவ் பகுதியில் கடந்த 20-ந்தேதி மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக சென்றது. அப்போது, சாலையில் இருந்த பள்ளம் காரணமாக டிரைவர் காரை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த டெம்போவுடன் கார் மோதியதில் 2 பேர் பலியாகினர். இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் குண்டும் குழியுமாக கிடந்த சாலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் ஒப்பந்ததாரர் ராம்ராத்தோட் அலட்சியமாக இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் உயிரிழந்து வருவதாக தெரியவந்தது.

இதன்பேரில் சாலை ஒப்பந்ததாரர் ராம் ராத்தோட் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக பால்கர் போலீஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் நவத்கர் தெரிவித்து உள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை