புதுச்சேரி

அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய 2 ரவுடிகள் கைது

புதுச்சேரியில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் கடற்கரை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் கையில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கண்டாக்டர் தோட்டம் பிரியதர்சினி நகரை சேர்ந்த ரவுடி மணிகண்டன் (வயது 20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.

இதே போல் ஜீவானந்தபுரம் பகுதியில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய ரவுடி ரகு என்ற மாரியப்பன் (36) என்பவரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து