புதுச்சேரி

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

திருக்கனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே உள்ள கைக்கிலப்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரையோரம் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருக்கனூர் போலீசார் அங்கு விரைந்து சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் 3 பேர் போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர். 6 பேர் தப்பியோடி விட்டனர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள் கொ.மணவெளியை சேர்ந்த நாகராஜன் (வயது 42), சித்தலம்பட்டு கிருஷ்ணா நகரை சேர்ந்த சோமசுந்தரம் (30), முட்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சந்தானம் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 720 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய கைக்கிலப்பட்டை சேர்ந்த ரவி ராஜன், சுத்துக்கேணியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், ஸ்ரீகாந்த் உள்பட 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.