பெங்களூரு

வாகன திருட்டு வழக்கில் 3 பேர் சிக்கினர்

பெங்களூருவில், வாகன திருட்டு வழக்கில் 3 பேர் சிக்கினர்.

பெங்களூரு:

பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராமமூர்த்திநகரை சேர்ந்த மாரப்பா, நிதின், பானசாவடியில் வசித்து வரும் மனோஜ் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் இரவு நேரங்களில் சாலையோரம் மற்றும் வீட்டின் முன்பு நிற்கும் வாகனங்களை கள்ளச்சாவி பயன்படுத்தி திருடி விற்று வந்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ரூ.14.30 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேர் மீதும் ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு