மும்பை

தானேயில் கழிமுகத்தில் விழுந்து 5 வயது சிறுவன் பலி

தானேயில் கழிமுகத்தில் விழுந்து 5 வயது சிறுவன் பலியானான்.

தினத்தந்தி

தானே, 

தானே காய்முக் பகுதியை சேர்ந்த சிறுவன் ருத்ரா பிமா(வயது5). இவன் இன்று மதியம் 2.30 மணியளவில் வீட்டருகே உள்ள கழிமுகப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றான். இதில் சிறுவன் எதிர்பாராதவிதமாக கழிமுகப்பகுதியில் உள்ள தண்ணீரில் விழுந்தான். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சுமார் மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறுவனை கழிமுகத்தில் இருந்து பிணமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தானே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 வயது சிறுவன் கழிமுகப்பகுதியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தானேயில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்