புதுச்சேரி

பள்ளத்தில் சிக்கிய சரக்கு வாகனம்

திருபுவனையில் குடிநீர் குழாய்க்கு தோண்டிய பள்ளத்தில் சிக்கிய சரக்கு வாகனத்தால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

தினத்தந்தி

திருபுவனை

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனையில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக சமீபத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அதனை சரிவர மூடாததால் பள்ளம் ஏற்பட்டள்ளது.

இந்த நிலையில் இன்று அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் ஒன்று பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்வது தடைப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் ஒருமணி நேரத்துக்கு பிறகு சரக்கு வாகனம் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதன் பின் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து