மாவட்ட செய்திகள்

பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உடல் குப்பை தொட்டியில் வீச்சு

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, மும்மூர்த்தி நகரில் உள்ள குப்பை தொட்டியில் நேற்று காலை பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது.

தாம்பரம்,

குழந்தை உடலை நாய்கள் கடித்து குதறியபடி இருந்தன. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், நாய்களை விரட்டிவிட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், குப்பை தொட்டியில் கிடந்த குழந்தையின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.