புதுச்சேரி

டெய்லரிங் வகுப்புக்கு சென்ற பட்டதாரி பெண் மாயம்

திருநள்ளாறு அருகே டெய்லரிங் வகுப்புக்கு சென்ற பட்டதாரி பெண் மாயமனார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

திருநள்ளாறு

திருநள்ளாறை அடுத்த சேத்தூர் தென்பிடாகையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் கவுசல்யா (வயது 22), பி.காம் பட்டதாரியான இவர் தினமும் வீட்டிலிருந்து சைக்கிளில் கிளம்பி, சேத்தூரிலிருந்து காரைக்காலுக்கு பஸ்சில் டெய்லரிங் வகுப்புக்கு போய் வந்தார்.

கடந்த 14-ந்தேதி வழக்கம்போல் டெய்லரிங் வகுப்புக்கு சென்ற கவுசல்யா வகுப்பு முடிந்து வீடு திரும்பவில்லை. அவரது தோழிகள், உறவினர்களைத்தொடர்பு கொண்டும் எந்த தகவலும் இல்லாததால், கவுசல்யாவின் அண்ணன் குமரன், திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து