மும்பை

அக்னிபத் திட்டத்தில் சேர வந்த வாலிபர் ரெயில் மோதி பலி

மும்ரா ரெயில் நிலையத்தில் அக்னிபத் திட்டத்தில் சேர வந்த வாலிபர் ரெயில் மோதி பலி

தினத்தந்தி

தானே,

மும்ரா ரெயில் நிலையத்தில் நேற்று காலை 11 மணி அளவில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழித்தடத்தில் வேகமாக வந்த ரெயில் வாலிபர் மீது மோதி விட்டு சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாலிபரை ரெயில்வே போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே வாலிபர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து தானே ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் துலே மாவட்டத்தை சேர்ந்த ராமேஷ்வர் தேவ்ரே(வயது21) எனவும், அண்மையில் தொடங்கப்பட்ட அக்னிபத் திட்டத்திற்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள மும்பை வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

இது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உடலை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்