புதுச்சேரி

சூறைக்காற்றில் சாய்ந்து விழுந்த மரம்

புதுவை 100 அடி ரோட்டில் சூறைக்காற்றில் சாய்ந்து விழுந்த மரத்தை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரியில் நேற்று இரவு சூறைக்காற்று வீசியது. இதில் 100 அடி ரோட்டில் கல்வித்துறை அலுவலகத்திற்கு எதிரே மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த புதுச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அந்த மரக்களையில் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் இன்று காலை உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று மரங்களை துண்டு துண்டாக வெட்டி நகராட்சி வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

----

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை